
இவ்வருட,மார்ச் மாதத்தின் மூன்றாம் ஞாயிறன்று (16-03-2008) இலங்கையிலிருந்து வெளியாகும் பிரபல வார இதழான 'ஞாயிறு தினக்குரல்' பத்திரிகையில் 'வலைப்பூக்கள்' பகுதியில் எனது கவிதைகளுக்கான வலைப்பூவான 'எம்.ரிஷான் ஷெரீப் கவிதைகள்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நேரத்தில் எனது வலைப்பூவினை ஞாயிறு தினக்குரலில் அறிமுகப்படுத்திய வலைப்பூக்களுக்கான ஆசிரியர் திரு.க.தே.தாசன் அவர்களுக்கும்,எனது ஒவ்வொரு ஆக்கங்களின் போதும் ,பதிவுகளின் போதும் எனது ஆக்கங்களின் குறைகளையும்,நிறைகளையும் தக்க சமயத்தில் சுட்டிக்காட்டி எனது வளர்ச்சிக்கு உதவும் நண்பர்கள் அனைவருக்கும் எனது மனம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்