Wednesday, January 16, 2008

குறிப்பாகப் பெண்கள் கவனத்திற்கு...!


கையடக்க கேமராக்கள்,மொபைல் வீடியோ கேமராக்கள்,மறைமுகமாக பொருத்திபதிவு செய்யும் மிகச் சிறிய கேமராக்கள் என்பதுஇன்றைய நவீன உலகில் மிகப் பிரபலமாக மிகச்சாதாரணமானவர்களின் கைளில் கூட உலா வரக்கூடிய ஒன்றாகஇருக்கிறது.
அறிவியல் புதிய கண்டுபிடிப்புகளை எல்லாம் நல்லபயன்பாடுகள் கருதி நமக்கு வழங்கினாலும் அதைஎத்தனை பேர் நன்மையாக பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி.

மொபைல் கேமராக்கள்,கையடக்க வீடியோ கேமராக்கள் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

பொது இடங்களில் கேமராக்கள் :

பொது இடங்களில் குறிப்பாக பேருந்து நிலையங்கள், ரயில்நிலையங்கள்,மார்க்கெட் போன்ற பொது இடங்களில் வரும் பெண்களை மொபைல் கேமராக்கள் மூலம் படமெடுத்து இன்டர்நெட்டில்
வைத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் பெருகி வருகிறது. ஆடை விலகிய
நிலையில் பல குடும்பப்பெண்களின் படங்கள்,வீடியோக்களை இன்டர்நெட்டில் வெளியிட்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.பெண்கள் இது பற்றிய விழிப்புணர்வு பெற்றுக் கொண்டு
தங்கள் ஆடைகள் சரியாக இருக்கிறதா என்று கவனம் வைத்துக் கொள்வது நல்லது.

பள்ளி,கல்லூரி,விடுதிகளில் :

பள்ளி,கல்லூரி,விடுதிகளில் தங்கும் மாணவிகள் அவர்களின் அறைகளில்,மற்றும் கழிவறை, குளியலறைகளில் கேமராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதில் கவனம் செலுத்தவும். சகமாணவர்கள் தங்களை கேமராக்களால் படமெடுத்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதும் இன்று
சகஜமாக நடந்துவருகிறது. இதிலும் கவனமாக எப்பொழுதும் விழிப்புணர்வுடன் இருக்கவும்.

பொதுக்கழிப்பிடங்கள்,குளியலறைகள்,ஹோட்டல் அறைகள் :

பொதுக் கழிப்பிடங்களுக்குச் செல்லும் பெண்கள்,பொதுக் குளியலறைகளை பயன்படுத்தும் பெண்கள் மற்றும் வெளியூர்களுக்குச் செல்லும்போது வேலைநிமித்தமாக அங்கு ஹோட்டல்கள்,லொட்ஜ்களில் தங்கநேரிடும்போது அங்குள்ள அறைகளை பயன்படுத்தும்போதும், கழிப்பறை,குளியலறைகளிலும் கேமராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்று நன்றாக கவனித்துப்பார்க்கவும்.தங்களுக்குத் தெரியாமல் தங்களை,தங்கள் செயல்களை படமெடுக்கும்
கேமராக்கள் அங்கு பொருத்தப்பட்டிருக்கலாம்.கவனம் தேவை.

மருத்துவமனைகள்(ஆஸ்பத்திரிகளில்)கவனம் தேவை :

மருத்துவமனைகளுக்குச் செல்லும் பெண்கள் தனியாக செல்லாதீர்கள்.தக்கதுணையுடன் செல்வது
நல்லது.மருத்துவமனைகளிலும் தங்கள் ஆடைகளை நெகிழ்த்தும்போதும், ஆடைகளை மருத்துவ
காரணங்களுக்காக ஆடைகளை விலக்கும்போதும் கவனமாக இருங்கள்.
கேமராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதைக் கவனித்து உறுதி செய்துகொள்ளுங்கள்.
மருத்துவமனைகளில் டெஸ்ட்டுக்கு என்று ஏதாவது மருந்துகளை உட்கொள்ளச் சொல்லும்போதும் கவனம் தேவை.உடனிருப்பவர்கள் அவர்களை கவனித்துக்கொள்ள வேண்டும்.

துணிக்கடைகளின் உடை டெஸ்ட் செய்யும் அறைகளும் அங்கு பொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடிகளும் :

நாம் துணிக்கடைகளுக்குச் செல்வது இயல்பானது.
அங்கு உடைகளைப்போட்டுப் பார்த்துச் சரிபார்க்க சிறியஅறை பெண்களுக்காகப் பெரிய கடைகளில்ஒதுக்கப்பட்டிருக்கும்.அந்தத் துணிக்கடைகளின் உடைகளைப் போட்டு சரிபார்க்கும் அறைகளைப் பயன்படுத்தும்பெண்கள் மிக மிகக் கவனமாக இருக்கவேண்டும். ஏனென்றால்
அங்கு கண்டிப்பாகக் கேமராக்கள் தங்களைக் கண்காணிக்கப் பொறுத்தப்பட்டிருக்கும். வேறு நோக்கத்தில் இல்லை என்றாலும் துணிகள் களவு போகிறதா,துணிகளை மறைக்கிறார்களா
என்று பார்ப்பதற்காகவாவது அங்கு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறது என்பதைக் கவனத்தில்
கொண்டு தாங்கள் உடைகளை மாற்றவும். கேமராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை என்றாலும் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும்.இந்தக் கண்ணாடிகளிலும் இரண்டு வகைக் கண்ணாடிகள் உண்டு.இவைகளைப்பற்றியும் நாம் தெரிந்துகொள்வது நல்லது.கண்ணாடிகளில் நம்மை மட்டுமே பிரதிபலிப்பது ஒருவகை. இன்னொரு வகை நாம் பார்க்கும்போது கண்ணாடியாக நம்மைப் பிரதிபலிக்கும்.ஆனால் மறுபக்கத்திலிருந்து அதாவது கண்ணாடிக்கு
அடுத்த பக்கம் பார்ப்பவர்களுக்கு ஒளிவு, மறைவு இல்லாமல் நம்மைக்காட்டும். இந்த
இரண்டாம் வகை கண்ணாடிகள் பற்றித்தான் நாம் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்.
இந்த உடை மாற்றும் அறைகளில் இந்தக் கண்ணாடிகளின் ஊடாக மறுபக்கம் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் அல்லது யாராவது தங்களை படமெடுக்கலாம்.இவைகளைக் கவனத்தில்
கொண்டு செயல்படவும்.

இறுதியாக :

நம்மையறியாமலேயே நம்மைப் படமெடுத்து,வீடியோ எடுத்து மற்றவர்களுடன் இன்டர்நெட்டில்
பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் தற்போது மிகச் சாதாரணமாகப் பரவிவருகிறது. இதற்குக்காரணம் கேமராக்கள்தான் என்றாலும் நாமும் கவனமாக இருந்து இது போன்றவைகளில்
சிக்காமல்,தக்க விழிப்புணர்வை நம் பெண்களுக்கும் சொல்லி நம் எல்லோரிடமும் ஒரு எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தவேண்டும்.

தகவல் உதவி : திரு.சாதிக்

Tuesday, January 8, 2008

2008-ல் கணினி பாதுகாப்பு விவகாரங்கள்


2008-ம் ஆண்டின் ஆரம்பத்தில் நாம் இருக்கிறோம். வைரஸ் மற்றும் பிற அச்சுறுத்தல்களிலிருந்து கணினிகளையும், நெட்வொர்க்குகளையும் பாதுகாக்க 2008-ல் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி சைமன்டெக் உள்ளிட்ட பாதுகாப்பு நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.

2008-ல் நிலவக்கூடிய பாதுகாப்பு போக்குகள் குறித்து சைமன்டெக் ஒரு பட்டியலையே வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் முதலில் இருப்பது "தேர்தல் பிரச்சாரங்கள்". அரசியல்வாதிகள் இணையதளத்தை பிரச்சார எந்திரமாக பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது என்பதால், அதனால் ஏற்படும் கணினி பாதுகாப்பு விவகாரமும் முக்கியம் என்று சைமன்டெக் கூறுகிறது. அதாவது இதன் மூலம் ஆன்லைன் நன்கொடைக்கான பிரச்சாரங்கள், தவறான தகவல்கள் பரவுவது, மோசடி ஆகியவை ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக எச்சரித்துள்ளது.

இரண்டாவதாக தொழில் முறையில் வைரஸ்களை பரப்புதல், மற்றும் கணினி தொடர்பான மோசடிகளில் இறங்கும் "பாட்" (BOT) கும்பலின் வளர்ச்சியை சைமன்டெக் குறிப்பிடுகிறது. வைரஸ் பரவிய ஒரு கணினியை மோசடிக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து மர்மமான வேலைகளில் இறங்க அவர்களுக்கு `பாட்' கும்பல் உதவலாம்.

உதாரணமாக `பாட்' கும்பல் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் கணினிகள் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக விளம்பரம் செய்தார்களேயானால், இதனை பயன்படுத்திக் கொள்ள `பாட்' கும்பலுக்கு பணம் செலுத்தி மோசடிகளில் இறங்கலாம்.

மேலும் முக்கியமாக பயனாளர் அல்லது வாசகர் உருவாக்கும் இடுகைகளை (User Generated Content) வெளியிடும் ஒரு இணையதளம் மென்பொருள் வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகும் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது என்று சைமன்டெக் எச்சரித்துள்ளது.

அதாவது குறிப்பிட்ட இணையதளம் உயர் தொழில்நுட்ப வைரஸ் ஸ்கேனிங் முறையை வைத்திருந்தாலும் அதனை ஏமாற்றி உள்ளே நுழைய முடியும் என்று அது கூறுகிறது.

இந்த பட்டியலில் செல்பேசி மூலம் பயன்படுத்தும் பயன்பாடுகள், தொல்லை மற்றும் மோசடி மின்னஞ்சல்களின் பெருக்கம் ஆகியவை இறுதியாக இடம்பெற்றுள்ளன.

ஆனால் செல்பேசி பாதுகாப்பு குறித்து சைமன்டெக் அதிக முன்னுரிமை அளிக்கவில்லை. ஏனெனில், செல்பேசிகள் தற்போது சிக்கல் நிறைந்த ஒரு தொழில்நுட்பமாக மாறி வருகிறது. செல்பேசி வங்கி நடவடிக்கைகள் மற்றும் பிற நிதி தொடர்பான நடவடிக்கைகள் அதில் மேற்கொள்ளும்போது மட்டுமே ஹேக்கர்கள் அதில் மோசடி செய்யமுடியும்.

அதேபோல் மோசடி மின்னஞ்சல் அல்லது தொல்லை மின்னஞ்சல்களை க்ளிக் செய்ய வைக்க புதிய உத்திகளை பயன்படுத்தலாம். உதாரணமாக எம்பி.3 அல்லது ஃபிளாஷ் கோப்புகள் சேர்க்கப்படலாம்.

இணையதளத்தில் மேலும் மேலும் அதிக விஷயங்கள் சேர்க்கப்பட சேர்க்கப்பட பாதுகாப்பு விஷயங்கள் மேலும் சிக்கலாகவே போய் முடியும் என்று சைமன்டெக் எச்சரிக்கை செய்துள்ளது.