Sunday, September 9, 2007

தண்ணீரும் மென்பானங்களும்...!


மனித வாழ்க்கைக்குத் தண்ணீர் இன்றியமையாதது. உலகில் பாதிப்பேருக்கு நிரந்தரமாக தண்ணீர்ச் சத்து குறைந்து விடுகிறது. அந்த நிலையில் 3% போல சமிபாட்டுச்சக்தியும் பாதிக்கப் படுகிறது.ஒரு நாளைக்கு 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். நிறைய நீர் குடித்து வந்தால் முதுகுவலி,மூட்டுவலி இவைகள் நன்றாகக் குறையும்.
நமது உடலில் உள்ள தண்ணீர் அளவு 2% குறைந்தாலும் ஞாபக சக்தி குறைந்துவிடும். கணக்குப் போட,கணனி பார்த்து வேலை செய்யத் தளர்ச்சியாகி விடுகிறது. 5 கிளாஸ் தண்ணீர் குடிப்பதால் கொலோன் புற்று நோய் 45% குறைகிறது. மார்பகப்புற்று நோய் 79% வீதமும் , சிறுநீரகப் புற்று நோய் 50% வீதமும் குறைக்கிறது என நிபுணர்கள் ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடித்துள்ளனர். இனிப்பான பிரபலமான மென்பானங்கள் குடிப்பதற்கு சுவையாக இருந்தாலும் அவற்றால் தீமைகள் நிறைய உண்டு. கீழ்க்காணும் ஆராய்ச்சிகளை வீட்டினிலேயே செய்து பார்க்கலாம்.


1) வட அமெரிக்காவில் நெடுஞ்சாலையில் ஏற்படும் கார் விபத்துக்களில் இரத்தக் கறையைப் போக்க போலீஸ்காரர்கள் 2 கலன் கோக் அவர்களுடைய காரில் வைத்துக்கொண்டு செல்கின்றனர்.

2) ஒரு எலும்புத்துண்டை கொக்கோகோலாவில் போட்டு வைத்தால் கோக்கிலுள்ள ஸிட்ரிக் அமிலத்தினால் அது கரைந்து விடும்.

3) மலசல கூடத்திலுள்ள கறைகளையும் கோக் போக்கி விடுவதோடு,பளிச்சென்று ஆக்கிவிடும். துருப் பிடித்த கறைகளையும் போக்கிவிடும்.

4) கோக் மற்றும் மற்றைய குளிர்பானங்கள் பொஸ்பொறிக் அமிலத்தில் தயாரிக்கப்படுவதால் அதிலுள்ள அமிலம் ஒரு ஆணியைக்கூட நான்கு நாட்களில் கரைத்து விடுமாம்.

இவற்றையெல்லாம் பார்க்கும் போது அமிலங்கள் கலக்கப்பட்டுள்ள இனிப்பான மென்பானங்களை நிறைய அருந்தினால்,நமக்கு உடல் நலம் கெட்டு நோய்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு.ஆகவே உங்களுக்குத் தேவை ஒரு கிளாஸ் தண்ணீரா அல்லது இவ்வகையான மென்பானங்களா?
நீங்களே முடிவிற்கு வாருங்கள்.

2 comments:

Unknown said...

excellent thoughts maaa... good indha kaalathu pillaigaluku arumaiyaanaa nalla nalla yosanigal varugiradhu.. varaverka padukiradhu.. enaku coffee, tea, milk, coke, pepsi kudikira pazhakkam ilai, naan mattum ila, enga veetla yaarumea kudika matom... arumaiyana thagavalgal...

Unknown said...

குளிர்பாணங்களுக்காக பூமியில் உறியும் நீரை குடிக்க உபயோக படுத்தினாலே, நம் குடி நீர் தேவை தீரும் நண்பா.... அமுதத்தை கொடுத்து விஷம் வாங்குக்கிறோம்...