Saturday, February 7, 2009

விகடனில் நான் !

வலையுலகப் பிரபல விருதான பட்டாம்பூச்சி விருதினை எழுத்தாளரும், கவிஞருமான திவ்யா எனக்களித்திருக்கிறார். விருதுகள் ஒருவருடைய ஆற்றலை, திறமையை இன்னும் ஊக்குவிக்கும்படியாக வழங்கப்படுபவை. இவ் விருதும் அவ்வப்போது எழுதி வருமென்னைத் தொடர்ச்சியாகவும் நிறைவாகவும்  எழுத ஊக்குவித்தபடி வந்துசேர்ந்துள்ளது. முயற்சிக்கிறேன். நன்றி திவ்யா !

இதை எழுதும் இவ்வேளையில் என்னை மேலும் எழுத உற்சாகப்படுத்தும் விதமாக விகடனின் இணைய இதழில் எனது கவிதைகளுக்கான இணைப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், 'காதலர் தின ஸ்பெஷல்' இதழில்  'திருமண வாழ்க்கைச் சமன்பாடுகள்' எனும் ஆக்கமும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இக் கணத்தில் எனது ஆக்கங்களைப் பிரசுரிக்கும் இதழ்கள்,குழுமங்கள், அவற்றின் ஆசிரியர்கள், எனது எழுத்துக்களைத் தொடர்ந்து வாசித்து, கருத்துக்கள் மூலம் என்னைச் செதுக்கி ஊக்குவிக்கும் நண்பர்கள், சக பதிவர்கள், வாசகர்கள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் எனது அன்பான நன்றிகளைத் தெரிவிப்பதோடு உங்கள் அனைவரோடும் இவ்விருதினைப் பகிர்ந்துகொள்கிறேன் !

என்றும் அன்புடன் உங்கள்,
எம்.ரிஷான் ஷெரீப்

68 comments:

Tech Shankar said...

Congrats Dear Dude.

Anonymous said...

வாழ்த்துகள் நண்பரே

தமிழ் said...

வாழ்த்துகள் நண்பரே

ராமலக்ஷ்மி said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் ரிஷான்.

geevanathy said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் ரிஷான்.

Sanjai Gandhi said...

வாழ்த்துக்கள் ரிச்சு.. ரொம்ப பெருமையா இருக்கு.. :)

உயரங்கள் உன்னை தொடட்டும் - நன்றி: பரிசல்காரன்.

Anonymous said...

இதயம் நிறைந்த வாழ்த்துகள் ரிஷான்!

கானா பிரபா said...

வாழ்த்துக்கள் பாஸ், கலக்குங்க ;)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

Hurrah!
வாழ்த்துக்கள் விகடன்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இனி உங்களை விகட-ரிஷான்-ன்னு தான் கூப்பிடுவேன்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

திவ்யா விருது கொடுக்கும் அதே நேரத்தில் விகடனும் விருது கொடுக்குது-ன்னா,
நம்ம திவ்யோ கூட விகடனே போட்டி போடப் பாக்குது-ன்னு தானே அர்த்தம்!
வாழ்த்துக்கள் திவ்யா! :)

கானகம் said...

Great and Congrats Rishan.. You deserve for this title and recognition..

Keep going like this and All the very best to you..

Please change the background colour.. All the Pinnoottams are in very dark..

சரவணகுமரன் said...

வாழ்த்துக்கள்

Kanags said...

ரிஷான்! தொடர்ந்து எழுதி மேலும் விருதுகள் பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஆதவா said...

உங்களுக்கு நல்லதொரு அங்கீகாரம் கிடைத்திருக்ககறது... வாழ்த்துகள் ரிஷான்

Muruganandan M.K. said...

வாழ்த்துக்கள் ரிஷான் ஷெரீப். தொடருங்கள் உங்கள் அயராத பதிவுப் பணியை.

சந்திப்பு said...

வாழ்த்துகள் நண்பரே Keep it up... do more

Thamira said...

வாழ்த்துகள் ரிஷான்.!

அன்புடன் அருணா said...

You have done it Rishan.!!!...Congrats!!!!
anbudan aruNaa

Anonymous said...

வாழ்த்துகள் நண்பரே!

Anonymous said...

வாழ்த்துக்கள்
அன்புடன்
திலகபாமா

Anonymous said...

ஹ்ய்ய்ய்யா.............ரொம்ப சந்தோஷமாயிருக்கு.... :-))

வாழ்த்துகள் ரிஷி....

உன்னோட படைப்புகள் அனைத்தும் அருமை... இந்த துறை தான்னு இல்லாம எல்லாவற்றிலும் கால் பதித்து வரும் உனது ஆக்கங்கள் இன்னும் மென்மேலும் வேரூன்றி வளர வாழ்த்துகள்....

Anonymous said...

இனிய வாழ்த்துக்கள் நண்பர் ரிஷான் அவர்களே..

தங்கள் செய்தியினைக் கண்டு நான் மிகவும் மகிழ்வடைந்தேன்..

இன்னும் நிறைய படைப்புகளில்.. உங்கள் சிந்தனைகள்.. வரவேண்டும்

வாழ்த்துக்கள்.. அன்புடன்

இளங்கோவன்

Anonymous said...

"ஆனந்தவிகடன்" இணைய இதழில் உங்களுக்கான இணைப்பு வழங்கப்பட்டுள்ளது
பற்றி மிக்க மகிழ்ச்சி ரிஷான் அவர்களே!

"விகடனின்" நெடுங்கால வாசகனும், அவ்விதழ் அளித்த ஊக்கத்தால்
படைப்புலகில்
இன்றும் வாசகர்கள் அறிந்துள்ள ஓர் படைப்பாளனாக விளங்கும் நான் எனது
மனமார்ந்த
வாழ்த்துக்களை உங்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்!

- கிரிஜா மணாளன் (கி.ம.)

Anonymous said...

அன்பு தம்பி ரிசான்!

மிகவும் மகிழ்ச்சி உங்கள் முன்னேற்றம் கண்டு. இதே போல் மென் மேலும் எழுத்துலகில் நீங்கள் முன்னேறி பிரகாசிக்க வேண்டும் என்பதே எமது விருப்பம்.

அன்புடன்
சுவாதி

Anonymous said...

மேலும் வெற்றிகள் கிடைக்க வாழ்த்துகள்

Anonymous said...

வாழ்த்துகள்!!!!!!!!!!

Anonymous said...

என் மனமார்ந்த வாழ்த்துகள் ரிஷான்,

Anonymous said...

வாழ்த்துகள் ரிஷான்

அன்புடன்
மதுமிதா

Anonymous said...

அன்பு ரிஷான் மனம் மிகவும் மகிழ்ச்சிடைகிறது மேலும் சிகரத்தை எட்ட என் அன்பு கனிந்த வாழ்த்துகள்

Anonymous said...

வாழ்த்துக்கள் நண்பர் ரிஷானுக்கு

Anonymous said...

மிக மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது ரிஷான்.

வாழ்க இன்னும் எழுத்துலகில் வளர்க! இறைவன் அருளொடு நல்லோராசிகளோடு வாழ்த்துகின்றேன்.

Anonymous said...

வாழ்த்துக்கள் ரிஷான்

அன்புடன்
சிறீதரன்

Anonymous said...

மனமார்ந்த வாழ்த்துகள் ரிஷான்

Anonymous said...

வாழ்த்துகள் ரிஷான்.உ

Anonymous said...

எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே ...

அன்புடன்
விஷ்ணு

Anonymous said...

அன்பின் ரிஷான் ஷெரீப்,
தாங்கள் தொடர்ந்து இன்னும் சிறப்பான விருதுகள் பெற வாழ்த்துக்கள்.
தொடரட்டும் தங்களின் எண்ணப்படியான வண்ணத் தமிழ்சேவை.

அராதா.

Anonymous said...

வாழ்த்துக்கள் ரிஷான்..
கலக்கல்..

Anonymous said...

மனம் நிறைந்த மகிழ்வான வாழ்த்துகள் த்ரிஷான்..

Anonymous said...

congrats

Anonymous said...

விகடனில் பெயர்வந்தாச்சா இனிமே இமயம் தொட்டுடுவீங்க ரிஷான்! மனம் நிறைந்த வாழ்த்துகள்!
நல்ல பல சிறந்த படைப்புகளை அளிக்கவும்! வருங்காலம் உங்களைப்பொன்ற இளைஞர்கள் கையில் என்பதைமனதில்கொண்டு வளமான சிந்திக்கவைக்கக்கூடிய ஆக்கங்களை தந்துகொண்டே இருக்கவும்.
பட்டாம்பூச்சி விருதும் கிடைத்ததற்குப்பாராட்டுக்களும் வாழ்த்துகளும்!

Anonymous said...

அன்புள்ள ரிஷான்...

உங்கள் வெற்றிகள் எனக்கு மிக்க மகிழ்வைத்தருகிறுது..

மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்...

தொடரட்டும் சாதனைகள்

Anonymous said...

மகிழ்ந்தோம்... வாழ்த்துகள் ரிஷான்...:)

Anonymous said...

வாழ்த்துக்கள் ரிஷான் :)

Anonymous said...

மகன்
நீங்கள் விருதுகள் பெறும் போதெல்லாம் நான் பெற்றதாக மகிழ்ச்சியடைகிறேன்
வாழ்த்துக்கள்

Anonymous said...

இனிய வாழ்த்துகள் பல, ரிஷான்......!

Anonymous said...

இதயங்கனிந்த வாழ்த்துகள், ரிஷ்........மென்மேலும் புகழடைய...

அன்புடன்
~காந்தி~

Anonymous said...

வாழ்த்துகள் ரிஷான் ....உங்கள் படைப்புகள் சீக்கிரத்தில் புத்தகமாக
வெளிவரவேண்டும் ...

Anonymous said...

வாழ்த்துக்கள் நண்பர் ரிஷான் அவர்களே..

Anonymous said...

congrats rishaan.
v.pitchumani

Anonymous said...

ரிஷான்
பெரூமையாய் இருக்கு..... பிறந்த மண்ணை நினைக்கையிலே.....வாழ்த்துக்கள் அன்புச் சகோதரனே.

அன்புடன் ஆயிஷா

Anonymous said...

வாழ்த்துகள் ரிஷான்.........வாழ்க வளமுடன்..

Anonymous said...

இதய ஆழ வாழ்த்துக்கள் ரிஷான்

Anonymous said...

அன்பின் ரிஷான்

மனங்கனிந்த நல்வாழ்த்துகள் - மேன்மேலும் உயரவும், பல்வேறு சிறப்புகளைப் பெறவும் நல்வாழ்த்துகள்

நட்புடன் ..... சீனா

Anonymous said...

ரிஷான் தல... வாழ்த்துக்கள் மா....

Anonymous said...

இணைய இதழில் உங்கள் படைப்பு வந்தது மிக்க மகிழ்ச்சி ரிஷான்..

வாழ்த்துக்கள்... நிறைய எழுதுங்கள்..

//....சும்மா வேலை செஞ்சுக்கிட்டிருக்கிற ரெண்டு கழுதைங்க சேர்ந்து பணம் சம்பாதிக்கிறதும் செலவழிக்கிறதுமா வாழ்க்கையை அனுபவிக்குறதுதானுங்க திருமண வாழ்க்கை..!....//

ஹா ஹா... ஹையோ செம தத்துவம்... சிரிப்பு தாங்கலை..

Anonymous said...

வாழ்த்துக்கள் ரிஷான்... மேன்மேலும் பல விருதுகளை பெற வாழ்துகிறோம்...!

தொடரட்டும் உங்கள் படைப்புகள்...!

தீபா சத்யா!

KARTHIK said...

ரிஷான்
டிரீட்டோட கணக்கு ஏறிகிட்டே போகுது :-))

வாழ்துக்கள்

M.Rishan Shareef said...

எனது எழுத்துக்களை வாசித்து, கருத்துக்களால் விமரிசித்துச் செதுக்கி என்னை மேலும் எழுத ஊக்கமளிப்பதோடு இங்கும் என்னை வாழ்த்திய எனது அன்புக்குரிய நண்பர்கள் தமிழ்நெஞ்சம்,vbtc, திகழ்மிளிர், ராமலக்ஷ்மி, தங்கராசா ஜீவராஜ்,சஞ்சய் காந்தி, கிரி, வெயிலான், கானா பிரபா, கேயாரெஸ், ஜெயக்குமார், சரவணகுமரன்,Kanags, ஆதவா, டொக்டர்.எம்.கே.முருகானந்தன்,சந்திப்பு,தாமிரா,அன்புடன் அருணா,பழமைபேசி, திலகபாமா, சுவாதி அக்கா, மஞ்சூர் ராசா, ஷங்கர் குமார், இப்னு ஹம்துன், விசாலம் அம்மா, துரை.ந.உ, விஜி சுதன், சீதாலக்ஷ்மி அம்மா, சந்திரவதனா அக்கா, விழியன், காமேஷ், லக்கி ஷாஜஹான், ஷைலஜா அக்கா, சாந்தி அக்கா, குட்டி செல்வன், ருக்மணி அம்மா, சஹாரா தென்றல், முகமூடி,நட்சத்திரா, இளங்கோவன், கிரிஜா மணாளன், கவிநயா, விஷ்ணு, அராதா,ஷிப்லி,பொன்சந்தர்,காந்தி, பூங்குழலி, நினா.கண்ணன், பிச்சுமணி, ஆயிஷா, புகாரி, சீனா,சாந்தினி வரதராஜன்,தீபா சத்யா,முகமூடி,ஷண்வேல்,கார்த்திக் இன்னும் தனிமடலில் தொடர்பு கொண்டு வாழ்த்திய அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள். உங்கள் அனைவரினதும் ஆதரவைத் தொடர்ந்தும் வேண்டுகிறேன்.

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் ஜெயக்குமார்,

//Please change the background colour.. All the Pinnoottams are in very dark..//

மாற்றிவிட்டேன்..சுட்டிக்காட்டியமைக்கு நன்றி நண்பரே :)

Anonymous said...

congrulation

மனமார்ந்த வாழ்த்துக்கள்

Anonymous said...

வாழ்த்துக்கள் ரிஷான்...!

Anonymous said...

வாழ்த்துகள் ரிஷான்.

வாழ்க வளர்க..

Anonymous said...

ரிஷான்...

நல்லாயிருக்குடா.. ;-)

வாழ்த்துகள்..

Anonymous said...

வாழ்த்துகள் ரிஷான்.. வாழ்க வளர்க

M.Rishan Shareef said...

அன்பின் tamilparks, நரேஷ்,சூர்யா, அஹமத் சுபைர், லக்கி ஷாஜஹான்,

உங்கள் வாழ்த்துக்களில் மகிழ்கிறேன். அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பர்களே :)

ராமலக்ஷ்மி said...

ரிஷான், இன்று விகடனில் பதிவர் எல்லோர் படைப்பும் வர முன்னோடியாக வழிகாட்டியாக விளங்கியது நீங்கள்தான். உங்களது இந்தப் பதிவு தந்த உந்துதலில்தான் விகடனுக்கு அனுப்ப ஆரம்பித்தேன். முதல் கவிதை வெளியான போது ‘ஜெய் ஹோ-நானும் விகடனில்’ எனக் கூவினேன். இப்போது மிகக் குறுகிய காலத்தில் தொடர்ந்து பல படைப்புகள் வெளியாகி விட்டன! உங்களுக்கு என் நன்றிகள்:)!

M.Rishan Shareef said...

அன்பின் ராமலக்ஷ்மி,

//ரிஷான், இன்று விகடனில் பதிவர் எல்லோர் படைப்பும் வர முன்னோடியாக வழிகாட்டியாக விளங்கியது நீங்கள்தான். உங்களது இந்தப் பதிவு தந்த உந்துதலில்தான் விகடனுக்கு அனுப்ப ஆரம்பித்தேன். முதல் கவிதை வெளியான போது ‘ஜெய் ஹோ-நானும் விகடனில்’ எனக் கூவினேன். இப்போது மிகக் குறுகிய காலத்தில் தொடர்ந்து பல படைப்புகள் வெளியாகி விட்டன! உங்களுக்கு என் நன்றிகள்//

மிகவும் மகிழ்ச்சி. தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி. திறமையானவர்களுக்கு விகடன் என்றும் களம் தரத் தயங்குவதில்லை.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !