Friday, November 2, 2012

2012 ஆம் வருடத்துக்கான 'வியர்வையின் ஓவியம்'' விருது

அன்பின் நண்பர்களுக்கு,
இலங்கை தொழிற்சங்க மத்திய நிலையத்தின் இலக்கிய இணைக் குழுவானது, அகில இலங்கை ரீதியில் நடத்திய 'வியர்வையின் ஓவியம்' இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் விழா 01.11.2012 நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு இலங்கை, மருதானை, டவர் அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
தமிழ், சிங்கள மொழிகளில் சிறுகதை, கவிதை, பாடல், காவியம், புகைப்படம் ஆகிய பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட போட்டிகளில் முதற்பரிசு பெற்றவர்களுக்கு விருதுகளோடு, சான்றிதழ்களும், பரிசுகளும், ஏனையவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் இந்நிகழ்வின் போது வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில், என்னால் எழுதப்பட்ட 'தாய்மை' எனும் சிறுகதையானது, முதலாம் இடத்திற்கான விருதையும்,  பரிசையும் வென்றது. அத்தோடு எனது கவிதைக்கு சிறப்புப் பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டன.


மகிழ்வான இத் தருணத்தில் எனது இலக்கியப் பயணத்தில் எப்பொழுதும் கூடவே பயணிக்கும் உங்கள் அனைவரையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
02.11.2012

5 comments:

Thozhirkalam Channel said...

உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

http://otti.makkalsanthai.com/upcoming.php

பயன்படுத்தி பாருங்கள் தமிழ் உறவுகளே,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

ராமலக்ஷ்மி said...

மகிழ்ச்சியும் மனமார்ந்த வாழ்த்துகளும் ரிஷான்:)!

M.Rishan Shareef said...

அன்பின் சகோதரி ராமலக்ஷ்மி,

உங்களது வருகையும் அன்பான வாழ்த்துக்களும் மகிழ்வையும் ஊக்கத்தையும் தருகிறது.

மிகவும் நன்றி சகோதரி !

Unknown said...

மகிழ்ச்சியின் மொழியில் என் இதய எழுத்துக்களில் வாழ்த்துக்கள் ரிஷான்

mohamedali jinnah said...

உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக
வாசகர்களை பெற,,, இணையுங்கள்,

எப்படி!
நீங்கள் முதலில் எங்கள் தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள்