Wednesday, June 3, 2015

விடுதலை செய்யப்படும் குற்றவாளிகள்

கைது செய்யப்பட்டிருந்த கொலையாளிகளும், பாலியல் குற்றவாளிகளும் அண்மைக்காலமாக நீதிமன்றத்தால் உடனுக்குடனே விடுதலை செய்யப்படுவது சம்பந்தமாகவே ஊடகங்களின் அண்மைய கேலிச் சித்திரங்கள் அமைந்திருக்கின்றன.

அரசியல் தலையீடுகளின் காரணங்களால் விடுதலை செய்யப்படும் இக் குற்றவாளிகள் சார்பாக நீதிமன்றம் தெரிவிப்பது ஒன்றே ஒன்றுதான். அது 'தகுந்த சாட்சிகள் இல்லாததன் காரணமாக விடுதலை செய்யப்படுகின்றனர்.'
உணர்ச்சி வேகத்தில் கொலை செய்பவர்களைத் தவிர, ஏனைய எந்தக் குற்றவாளியும், 'சாட்சி'களை வைத்துக் கொண்டு குற்றத்தைச் செய்வதில்லை. 'சாட்சி'கள் இல்லையென்பதற்காக குற்றவாளிகள் நிரபராதிகளாகி விட முடியாது.

ஆனால் இன்றைய நீதி தேவதைக்கு 'சாட்சி'கள் அவசியமாக இருக்கிறது. குற்றவாளிகளின் சார்பாக வாதாடும் சட்டத்தரணிகளுக்கு பணம் ஒன்றே பெரிதாக இருக்கிறது.






- எம்.ரிஷான் ஷெரீப்

No comments: