Friday, April 10, 2009

உலகிலேயே பெரும் செல்வந்த நாடாக இந்தியா

நன்றி - 22.03.2009 இலங்கையிலிருந்து வெளியாகும் ஞாயிறு வீரகேசரி வாரவெளியீட்டில் பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரை. உங்களுடன் பகிர்ந்துகொள்ளவென இங்கு இட்டிருக்கிறேன்.

                   இந்தியாவின் ஒரு சில மோசடி அரசியல்வாதிகளும் இலஞ்ச ஊழல்களில் ஈடுபடும் ஐ.ஏ.எஸ்., ஐ.ஆர்.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளும் சட்ட விரோதமான வகையில் தனிப்பட்ட கணக்குகளில் வெளிநாட்டு வங்கிகளில் பணத்தை வைப்பிலிட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

                   இவ்வாறு வைப்பிலிடப்பட்டுள்ள தொகை சுமார் 1500 பில்லியன் டொலர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. இது அயலார் சொத்தை தம் சுயநலத்திற்காகப் பயன்படுத்தும் செயலாகும்.

                    இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் தொகையைவிட இது 13 மடங்கு மேலானதாகக் கருதப்படுகிறது. 45 கோடி மக்களுக்கும் இப்பணத்தைப் பங்கிட்டால் ஆளுக்கு 100,000 ரூபா கிடைக்கும். பெருமளவான இந்தத் தொகைப் பணம் இந்திய மக்களிடமிருந்து பெறப்பட்டு அவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து சுயநலத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகும். இந்தக் கறுப்புப் பணமும் சொத்தும் இந்தியாவிற்கு மீள வருமானால் வெளிநாட்டுக் கடன் பேரில் செலுத்தப்பட வேண்டிய முழுத் தொகையையும் 24 மணி நேரத்தில் செலுத்தி விடலாம். அவ்வாறு கடனை செலுத்திய பின்னரும் கடன் தொகையைவிட மேலதிகமாக 12 மடங்குப் பணம் மீதமாகும்.

                     மீதமாகும் இப்பணத்தை வருமானம் தரும் முதலீட்டுக்குப் பயன்படுத்தினால் மத்திய அரசாங்கத்திற்கு வருடாந்த வரவு செலவுத் திட்டத்தைவிட அதிகமான வட்டி வரவுண்டாகும். சகல வட்டி வீதங்களையும் இரத்துச் செய்தாலும்கூட நாட்டை சுமுகமாக வழிநடத்த மத்திய அரசுக்கு இயலக்கூடியதாகவிருக்கும்.

                      இந்தியா ஒரு வறிய நாடு என்று கூறப்பட்டு வருகிறது. இந்தக் கறுப்புப் பண வைப்பை ஒரு போட்டியாக ஒலிம்பிக்கில் வைத்தால் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.  ஏனெனில் வங்கிக் கணக்கு வைப்பு அடிப்படையில் இனங் காணப்பட்ட முதல் ஐந்து நாடுகளில் முதலிடம் பெறுவது இந்தியாவாகும். அடுத்து இடம்பெறுவது முறையே ரஷ்யா, ஐக்கிய இராச்சியம், உக்ரெய்ன், சீனா என்பன.

                       இந்தியா1456 பில்லியன் டொலர்கள், ரஷ்யா  470 பில்லியன் டொலர்கள், ஐக்கிய இராச்சியம் 390 பில்லியன் டொலர்கள், உக்ரெய்ன்100 பில்லியன் டொலர்கள், சீனா 96 பில்லியன் டொலர்கள் என்ற ரீதியில் வெளிநாட்டு வங்கிகளில் பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளது. இந்த விபரங்கள் சுவிஸ் வங்கிக் கழகத்தின் 2000 ஆம் ஆண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

                        அண்மையில் சர்வதேச அழுத்தத்தின் பேரில், சம்பந்தப்பட்ட அரசாங்கங்கள் முறைப்படி கேட்டால் வங்கிக் கணக்கைக் காட்டுவதாக சுவிஸ் அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருந்தது. இந்தியா விபரங்களைத் தருமாறு கோரவில்லை. எனவே இலஞ்சமும் ஊழலும் மலிந்துள்ளது என்று அர்த்தமாகுமா என்ற கேள்வியும் எழுகிறது.

                         இந்தியா வறிய நாடா என்று கேட்கப்படும் கேள்விக்கு சுவிஸ் வங்கி பதில் சொல்லும். வெளிநாட்டு வங்கிகளின் தனிப்பட்டோர் கணக்குகளில் 1500 பில்லியன் டொலர்கள் வைப்புச் செய்யப்பட்டுள்ளபோதும் இந்தியா ஒரு வறிய நாடா என்பதை ஒவ்வொருவரும் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

                           சுமார் 80,000 பேர் ஆண்டுதோறும் சுவிற்சர்லாந்துக்கு பயணிக்கின்றார்கள். அவர்களில் 25,000 பேர் அடிக்கடி செல்கிறார்கள் "வெளிப்படையாக இவர்கள் உல்லாசப் பயணிகள் அல்லர். வேறு காரணங்களுக்காகச் செல்பவர்கள்'' என்று சட்டவிரோத பணம் தொடர்பில் கண்டறியும் அதிகாரி ஒருவர் நம்புகிறார்.

                           நேர்மையற்ற வகையில் பணம் திரட்டுவோர்களாகக் கருதப்படுபவர்கள். மோசடிகள் செய்யும் அரசியல்வாதிகள், இலஞ்ச அதிகாரிகள், கிரிக்கெட் வீரர்கள், திரைப்பட நடிகர்கள், சட்டவிரோத பாலியல் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் வன பரிபாலன இயக்குநர்கள் இத்தகையோர் நாட்டின் சொத்துக்களையும் சுபீட்சத்தையும் உறிஞ்சுகிறார்கள்.

                             இது சுவிஸ் வங்கிக் கணக்கு பற்றியது மட்டுமேயாகும்.மற்ற சர்வதேச வங்கிகளின் கணக்குகள் குறித்த விபரமல்ல.

                             உலக நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது வேறு எந்த நாட்டினதும் வைப்பு இந்தியாவைவிட மிஞ்சவில்லை. சுவிஸ் வங்கியில் எந்த ஒரு உலக நாடும் 1456 பில்லியன் டொலர்களை வைப்புச் செய்துள்ளதாக அறிவிக்கப்பட வில்லை.

                              இப்போது இந்தியாவைப் பொறுத்த வரையில் இந்தியா ஒரு வறிய நாடா? என்று கேட்பதைவிட இந்தியாவைக் காப்பாற்ற எவருமுண்டா என்று கேட்க வேண்டும் போல் தோன்றுகிறது.

17 comments:

அன்பரசு said...

பணக்கார நாடுதங்க. பணம் இருகின்ற இடந்தான் வேற. அதேபோல் இங்கு தானிய களஞ்சியங்களில் இருக்கும் தானியங்கள் இந்தியாவின் ஓட்டு மொத்த தேவையை விட இரண்டு மடங்கு (தனியார் வர்த்தகர்களிடம் இருப்பது தவிர), ஆனால் பட்டினிச் சாவுகள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. இதை விளக்கித்தான் அமர்த்தியா சென் நோபல் பரிசு வாங்கினார். என்ன பயன்? எந்த மாற்றமும் இல்லை

கோவி.கண்ணன் said...

//இப்போது இந்தியாவைப் பொறுத்த வரையில் இந்தியா ஒரு வறிய நாடா? என்று கேட்பதைவிட இந்தியாவைக் காப்பாற்ற எவருமுண்டா என்று கேட்க வேண்டும் போல் தோன்றுகிறது. //

இந்தியாவைக் காப்பாற்ற வருகிறேன் என்பவரும் அதைச் செய்ய லஞ்சம் கேட்பார்

Muhammad Ismail .H, PHD., said...

அன்பின் எம்.ரிஷான் ஷெரீப்,

// இந்தியா 1456 பில்லியன் டொலர்கள், ரஷ்யா 470 பில்லியன் டொலர்கள், ஐக்கிய இராச்சியம் 390 பில்லியன் டொலர்கள், உக்ரெய்ன்100 பில்லியன் டொலர்கள், சீனா 96 பில்லியன் டொலர்கள் //

அம்மாடியோவ் இந்த விஷயத்தில் ரஷ்யாவானது இந்தியாவை முந்த வேண்டுமென்றால் இன்னும் மேலும் இரு மடங்கு (986 பில்லியன் டொலர்கள்) சுவிஸ் வங்கியில் கொண்டு போய் கொட்டினால் தான் முடியும். ஆனால் அதற்க்கு இப்பொழுது வாய்ப்பில்லை. ஆக இந்த விஷயத்தில் இந்தியாவிற்கு போட்டியே கிடையாது. !!!


எமது தேசத்தின் இவ்வளவு பொருளாதாரம் ஒரு அன்னிய தேசத்தில் முடக்கப்பட்டு இருப்பதால் தான் முதலாளிகளாக இருக்க வேண்டிய எமது சகோதர, சகோதரிகள் உலகின் வறண்ட பாலை மண்ணிலும், மற்ற பிரதேசங்களிலும் தொழிலாளிகளாக உடலை வருத்தி தங்களது ஜீவனம் நடத்த வேண்டி இருக்கின்றது. எங்களின் இறைவா, இதற்கொரு தீர்வை தரமாட்டாயா?


with care and love,

Muhammad Ismail .H, PHD,

ஆ.சுதா said...

படிக்க ஆதங்கமாக தான் இருக்கின்றது.
சற்று அதிர்ச்சியாகவும் உள்ளது.

podhigai thendral said...

என்ன கொடுமை சார் இது...விட்டால் இந்தியாவே மற்ற நாடுகளுக்கு கடன் உதவி செய்யலாம் போல் இருக்கே..!

Tamilish Team said...

Hi Rishan,

Congrats!

Your story titled 'உலகிலேயே பெரும் செல்வந்த நாடாக இந்தியா' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 10th April 2009 08:00:08 PM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/51614

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

மாசிலா said...

செய்திகள் கருத்துக்கள் பகிர்ந்தமைக்கு மிக்க ந‌ன்றி.

குப்பன்.யாஹூ said...

every one knows that India is a wealthy nation, not only in economy but in spiritual, educational, intellectual, vedical, technology, human behavioural India is richest country

ARV Loshan said...

அட.. பிறகென்ன..

முன்பொரு தடவை பிரபல இங்கிலாந்தின் வர்த்தகர் (பெயர் ஞாபகம் இல்லை) சொன்னது தான் ஞாபகம் வருகிறது .." இந்தியாவில் தான் அதிகம் பேர் கொடீஸ்வரராகவும் இருக்கிறார்கள்.. ஏழைகளாகவும் மிக அதிகம் பேர் இருக்கிறார்கள்"

M.Rishan Shareef said...

அன்பின் பனங்காட்டான்,

//பணக்கார நாடுதங்க. பணம் இருகின்ற இடந்தான் வேற. அதேபோல் இங்கு தானிய களஞ்சியங்களில் இருக்கும் தானியங்கள் இந்தியாவின் ஓட்டு மொத்த தேவையை விட இரண்டு மடங்கு (தனியார் வர்த்தகர்களிடம் இருப்பது தவிர), ஆனால் பட்டினிச் சாவுகள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. இதை விளக்கித்தான் அமர்த்தியா சென் நோபல் பரிசு வாங்கினார். என்ன பயன்? எந்த மாற்றமும் இல்லை//

உங்கள் முதல் வருகை மகிழ்ச்சி தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

உண்மையான கருத்து உங்களுடையது. அமர்த்தியா சென் போல பலபேர் உண்மை நிலவரத்தைச் சுட்டி எழுதிவிட்டார்கள். இன்னும் எந்த மாற்றமும் இல்லை என்பது வேதனைக்குரியதே !

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் கோவி.கண்ணன்,

////இப்போது இந்தியாவைப் பொறுத்த வரையில் இந்தியா ஒரு வறிய நாடா? என்று கேட்பதைவிட இந்தியாவைக் காப்பாற்ற எவருமுண்டா என்று கேட்க வேண்டும் போல் தோன்றுகிறது. //

இந்தியாவைக் காப்பாற்ற வருகிறேன் என்பவரும் அதைச் செய்ய லஞ்சம் கேட்பார்//

:)
ஆமாம்..அப்படியும் நடக்கலாம்..எல்லாவற்றிலும் புகுந்திருக்கும் லஞ்சம், செல்வம் செழிக்கும் இதிலும் புகுந்துவிடும். ஏற்கெனவே புகுந்துவிட்டதனால்தானே இன்றுவரை உலகவங்கிகளுக்கென மட்டும் செல்வந்தநாடாக இந்தியா இருக்கிறது :(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் முஹம்மத் இஸ்மாயில்,

//அம்மாடியோவ் இந்த விஷயத்தில் ரஷ்யாவானது இந்தியாவை முந்த வேண்டுமென்றால் இன்னும் மேலும் இரு மடங்கு (986 பில்லியன் டொலர்கள்) சுவிஸ் வங்கியில் கொண்டு போய் கொட்டினால் தான் முடியும். ஆனால் அதற்க்கு இப்பொழுது வாய்ப்பில்லை. ஆக இந்த விஷயத்தில் இந்தியாவிற்கு போட்டியே கிடையாது. !!! //

இன்று மட்டுமில்லை. என்றுமே போட்டி கிடையாது அல்லது போட்டிக்கு எந்த நாடும் அருகில் வராது என்று நினைக்கிறேன்.


//எமது தேசத்தின் இவ்வளவு பொருளாதாரம் ஒரு அன்னிய தேசத்தில் முடக்கப்பட்டு இருப்பதால் தான் முதலாளிகளாக இருக்க வேண்டிய எமது சகோதர, சகோதரிகள் உலகின் வறண்ட பாலை மண்ணிலும், மற்ற பிரதேசங்களிலும் தொழிலாளிகளாக உடலை வருத்தி தங்களது ஜீவனம் நடத்த வேண்டி இருக்கின்றது. எங்களின் இறைவா, இதற்கொரு தீர்வை தரமாட்டாயா?//

மிகவும் சரி நண்பரே. பிரார்த்திப்போம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் ஆ.முத்துராமலிங்கம்,

//படிக்க ஆதங்கமாக தான் இருக்கின்றது.
சற்று அதிர்ச்சியாகவும் உள்ளது.//

முதன்முதல் படித்தபொழுது எனக்கும் இப்படித்தான் இருந்தது.
ஆனால் அதிர்ச்சியும் ஆதங்கமும் வரவேண்டியவர்களுக்கு இன்னும் வரவில்லை. :(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் பொதிகைத் தென்றல்,

//என்ன கொடுமை சார் இது...விட்டால் இந்தியாவே மற்ற நாடுகளுக்கு கடன் உதவி செய்யலாம் போல் இருக்கே..!//

நிச்சயமாக..ஆனால் இன்னும் வாங்குவதை நிறுத்தவில்லை. :(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் மாசிலா,

//செய்திகள் கருத்துக்கள் பகிர்ந்தமைக்கு மிக்க ந‌ன்றி.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் குப்பன் யாஹூ,

//every one knows that India is a wealthy nation, not only in economy but in spiritual, educational, intellectual, vedical, technology, human behavioural India is richest country//

மிகச் சரி நண்பரே.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் லோஷன்,

//அட.. பிறகென்ன..

முன்பொரு தடவை பிரபல இங்கிலாந்தின் வர்த்தகர் (பெயர் ஞாபகம் இல்லை) சொன்னது தான் ஞாபகம் வருகிறது .." இந்தியாவில் தான் அதிகம் பேர் கொடீஸ்வரராகவும் இருக்கிறார்கள்.. ஏழைகளாகவும் மிக அதிகம் பேர் இருக்கிறார்கள்"//

அவர் முன்பு சொன்ன அதே நிலைமை இன்னும் மாறவில்லை என்பதுதான் மிகக் கொடுமையான விடயம் :(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !