Wednesday, August 20, 2008

இணைய வானொலியில் எனது கவிதை !

அன்பின் நண்பர்களுக்கு,

இனிய வணக்கங்கள்.

முத்தமிழ் இணையத்தளம் மற்றும் பிரவாகம் ஆண்டு மலரில் பிரசுரமான எனது 'புதைகுழி வீடு'கவிதை, www.worldnews.com இன் தமிழ்க்குரலின் "கவிதை கேளுங்கள்" நிகழ்ச்சியில் 19-08-2008 முதல் 25-08-2008 வரை பிரபல அறிவிப்பாளர் சாத்தான்குளம் திரு.அப்துல் ஜப்பார் அவர்களது கம்பீரமான குரலில் ஒலிபரப்பாகி வருகிறது.
அதன் ஒலிக்கோப்பை இத்துடன் இணைத்திருக்கிறேன்.

rishan.mp3 -

இணைய வானொலிக்காக எனது கவிதையைத் தேர்ந்தெடுத்து தனது குரல் மூலம் மேம்படுத்திய திரு.அப்துல் ஜப்பார் அவர்களுக்கு எனது மகிழ்ச்சி கலந்த நன்றி !

வானொலி ஒலிபரப்பை ஒலிக்கோப்பாக மாற்றித்தந்த நண்பர் கானாபிரபாவுக்கு நன்றி !

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்

Tuesday, August 5, 2008

நானும் எனது ஒரு வருடப்பதிவுகளும்...!

இன்றோடு வலைத்தளம் ஆரம்பித்து சரியாக ஒருவருடம் பூர்த்தியாகிறது.

கடந்த வருடம் ஏப்ரலில் இருந்துதான் இணையத்தில் உலா வர ஆரம்பித்தேன்.



ஆரம்பத்தில் பொழுதுபோக்காக எல்லா வலைப்பூக்களையும் மேய்ந்தவாறிருந்தேன். தமிழில் எழுதும் ஆவல் மிகுந்தது. ஆனால் எழுதத் தெரிந்திருக்கவில்லை. நண்பர் இசையமைப்பாளர் அமீர் அவர்கள் தமிழ் யுனிகோட் எழுத்துரு ஈ கலப்பையை அறிமுகம் செய்து வைத்து தமிழில் எழுதக் கற்றுக் கொடுத்தார். அவருக்கு நன்றி !



தொடர்ந்து ஜூலையிலிருந்து கீற்று இணையத்தளத்தில் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். பின்னர் கீற்று, வார்ப்பு, அதிகாலை இணையத்தளங்களில் கவிதைகளும் திண்ணை இணையத்தளத்தில் எனது சிறுகதைகளும் தொடர்ந்து வெளிவரத்தொடங்கின.



அவ்வேளையில் வலைத்தளம் ஆரம்பிப்பது குறித்து எதுவும் தெரிந்திருக்கவில்லை. நண்பர் பாடகர் ஹரீஷ் ராகவேந்திரா அவர்கள் கூகுளின் ப்ளொக்ஸ்பொட்டை அறிமுகப்படுத்தி எழுத உதவினார். அவருக்கு நன்றி.



தொடர்ந்தும் வலைப்பூ மற்றும் பதிவுகள் சம்பந்தமாக தனிப்பட்ட முறையில் நல்ல பல ஆலோசனைகள் தந்து வரும் நண்பர் PKP மற்றும் நண்பர் தமிழ்நெஞ்சம் அவர்களுக்கும் எனது நன்றி !



MY PHOTO COLLECTIONS என முதன்முதல் ஆரம்பித்த வலைத்தளம் தான் இன்று தன் ஒருவருடப் பூர்த்தியைக் கொண்டாடுகிறது. இதில் என்னால் எடுக்கப்பட்ட, நான் ரசித்த புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறேன்.



அடுத்ததாக எனது எண்ணங்களை வெளிப்படுத்தும் கட்டுரைகளைக் கொண்ட எண்ணச் சிதறல்கள் வலைத்தளத்தை ஆரம்பித்தேன்.

தொடர்ந்து கவிதைகள், சிறுகதைகள், சிந்திக்கச் சில படங்கள், விமர்சனங்கள், உலக நிகழ்வுகள் ஒரு பார்வை, COLLECTION OF ARTICLES என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி வலைத்தளங்கள் வைத்து எழுதிவருகிறேன்.



கடந்த மார்ச் மாதத்தின் ரேடியோஸ்பதி ஒரு வார சிறப்பு நேயராக நண்பர் கானாபிரபா என்னை,எனது விருப்பப்பாடல்களுடன் அறிமுகப்படுத்தி வைக்க மிகப்பெரிய நட்புவட்டம் என்னுடன் கைகோர்த்தது. நண்பர் கானாபிரபா அவர்களுக்கு நன்றி !



கடந்த ஜூன் மாதம் முழுதும் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' வலைத்தளத்தில் எழுதும்படி நண்பர் கேயாரெஸ் அவர்களால் கேட்டுக்கொள்ளப்பட்டேன். அந்தப்பதிவுகள் மூலமாகவும் எனக்கு ஏராளமான நண்பர்களும், வாசகர்களும் கிடைத்தனர். நண்பர் கேயாரெஸ் அவர்களுக்கு நன்றி !



எல்லாவற்றிலுமாக இந்த ஒருவருட காலப்பகுதியில் 431 பதிவுகள் எழுதிவிட்டேன்.எனது ஒவ்வொரு பதிவுக்கும் வந்து பதிவின் குறை நிறைகளைச் சொல்லிப் பின்னூட்டமிட்டு , மின்னஞ்சல் அனுப்பி, தொலைபேசி உற்சாகப்படுத்திய அத்தனை அன்புள்ளங்களுக்கும் நன்றி நண்பர்களே...!



என்றும் அன்புடன் உங்கள்,

எம்.ரிஷான் ஷெரீப்.